- பொன்முடி
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஜி.ஜெயச்சந்திரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விசலாக்ஷி
புதுடெல்லி: தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை 30 நாட்களுக்கு நீதிபதி நிறுத்திவை த்திருந்தார். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
The post பொன்முடி மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் 12ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.